வீட்டுக் கூரை பறந்துவிட்டது
வீசிய புயலில் - இனி
தெளிவாய்த் தெரியும் நிலா
- வைரமுத்து.
தின்ணையில் வசித்த தாத்தா
வீட்டுக்குள் வந்தார்
படமாக.
- யாரோ.
Saturday, August 15, 2009
ஆண்டவன் யார்?
பிறப்பில் வருவது யாரெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பினில் வருவது யாரெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
வாழ்வினில் வருவது யாரெனக் கேட்டேன்
வாழ்ந்து பாரென இறைவன் பணித்தான்
ஆண்டவனே நீ யாரெனக் கேட்டேன்
அனுபவம் என்பதே நான் தான் என்றான்.
- கண்ணதாசன்.
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பினில் வருவது யாரெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
வாழ்வினில் வருவது யாரெனக் கேட்டேன்
வாழ்ந்து பாரென இறைவன் பணித்தான்
ஆண்டவனே நீ யாரெனக் கேட்டேன்
அனுபவம் என்பதே நான் தான் என்றான்.
- கண்ணதாசன்.
அருமையான காதல் கவிதை
நடுநிசியில் எழுந்து
யாருக்கும் தெரியாமல்
விளக்கின் ஒளியில்
படித்துப் பார்த்தேன்
உள்ளங்கையில் எழுதிய
அவள் பெயரை.
- பா. விஜய்
யாருக்கும் தெரியாமல்
விளக்கின் ஒளியில்
படித்துப் பார்த்தேன்
உள்ளங்கையில் எழுதிய
அவள் பெயரை.
- பா. விஜய்
Subscribe to:
Posts (Atom)